காத்தான்குடிப் பொலிசார் காத்தான்குடி பிரதேசத்தில் வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த அபினை கைப்பற்றியுள்ளனர்.
நேற்று மாலை காத்தான்குடி பொலிசாருக்கு கிடைத்த தகவலையடுத்து குறித்த வீடு பரிசோதிக்கப்பட்ட போது மறைத்து வைத்திருந்த அபினை கைப்பற்றியுள்ளனர்.
25.28 கிராம் நிறைகொண்ட அபின் இதன் போது கைப்பற்றப்பட்டதாக காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி குணவர்த்தன தெரிவித்தார்.
புதிய காத்தான்குடி விடுதி வீதியலுள்ள வீடொன்றிலேயே இவ் அபின் கைப்பற்றப்பட்டதாகவும் இதை வைத்திருந்த கச்சிமுகம்மது லியாவுதீன் என்பவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளதாகவும் பொலிஸ் பொறுப்பதிகாரி தெரிவித்தார். குறித்த நபரையும் [...]







