29 January 2012

0 Comments

கூட்டமைப்புக்கு தகுந்த பாடம் புகட்டுவோம் -கிழக்கிலங்கை மாற்றத்தை நோக்கிய மக்கள் அமைப்பு

 கூட்டமைப்புக்கு தகுந்த பாடம் புகட்டுவோம்  -கிழக்கிலங்கை மாற்றத்தை நோக்கிய மக்கள் அமைப்பு  28.01.2012 எமது கிழக்கு மாகாண மக்கள் அன்றுதொட்டு இன்றுவரை அரசியல்தலைவர்களினால் ஏமாற்றப்பட்டு வருகின்றனர். கிழக்கு மாகாண மக்கள் தொடர்ந்தும் ஏமாறும் சமூகமாக இருக்க முடியாது. கடந்த காலங்களில்தான் எமது மக்கள் ஏமாற்றப்பட்டு வந்தார்கள் தொடர்ந்தும் எமது மக்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் ஏமாற்ற நினைத்துக் கொண்டிருக்கின்றனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் போன்றவர்கள் கிழக்கு மக்களை தொடர்ந்தும் ஏமாற்ற முடியும் என்று [...]

Continue reading...

27 January 2012

0 Comments

மட்டு. மாவட்டத்தின் பல பகுதிகளில் நாளை மின்துண்டிப்பு

இலங்கை மின்சார சபையின் பராமரிப்பு வேலைகள் காரணமாக  மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பகுதிகளில் நாளை  சனிக்கிழமை காலை 09.00 மணி தொடக்கம் பகல் 11.30 மணி வரை  மின்வெட்டு இடம்பெறவுள்ளது. வீரகொட, சடையந்த,  புத்தந்கள, மண்டூர்,  சங்கர்புரம, கணேசபுரம், குறுமண்வெளி,  மகிழூர்,  பழுகாமம்,  கொக்கட்டிச்சோலை,  மகிழடித்தீவு, முதலைக்குடா, அம்பிலாந்துறை,  கடுக்காமுனை,  பெரியபோரதீவு, முனைத்தீவு, தும்பங்கேணி,  திக்கோடை,  39ஆவது கிராமம், தாந்தாமலை,  பெரியகல்லூறு,  கோட்டைக்கல்லாறு, களுவாஞ்சிக்குடி,  களுதாவளை,  தேற்றாத்தீவு,  செட்டிபாளையம்,  மாங்காடு,  குருக்கள்மடம்,  கிரான்குளம், புதுக்குடியிருப்பு , தாழங்குடா [...]

Continue reading...

27 January 2012

0 Comments

கிழக்கு பல்கலை உபவேந்தர் நியமனம் குறித்து ஆர்ப்பாட்டம்

விண்ணப்பங்கள் கோரப்பட்டமைக்கு அமைவாகவே கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு நிரந்தர உபவேந்தர் ஒருவரை நியமிக்க வேண்டும் என வந்தாறுமூலையிலுள்ள கிழக்கு பல்கலைக்கழகம் மற்றும் கல்லடியிலுள்ள விபுலானந்த இசை, நடனக் கல்லூரி என்பவற்றில் இன்றைய தினம் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. விரிவுரை பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் நேற்று நண்பகல் வந்தாறுமூலை வளாக முன்றலில் ஒன்றுகூடி கவனயீர்ப்பு போராட்டத்திலும் ஈடுபட்டனர். நீண்டகாலமாக பதில் உபவேந்தரின் கவனிப்பில் இருந்துவரும் கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு உபவேந்தர் நியமிக்கப்படும் வரை அதிகாரமளிக்கப்பட்ட அதிகாரி கடமையில் இருப்பார் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. [...]

Continue reading...

27 January 2012

0 Comments

தேங்காயின் மருத்துவ குணங்கள்

தேங்காய் மருத்துவத்தின் அடையாளச் சின்னம் என்கிறது சித்த மருத்துவம். தேங்காயில் பல்வேறு மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன. புரதச் சத்து, மாவுச் சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு உட்பட தாதுப் பொருள்கள், வைட்டமின் சி, அனைத்து வகை பி காம்ப்ளக்ஸ் சத்துக்கள், நார்ச்சத்து என உடல் இயக்கத்துக்குத் தேவைப்படும் அனைத்துச் சத்துகளும் தேங்காயில் உள்ளன. தேங்காய் எண்ணெய்: தேங்காய் எண்ணெய் சித்த மருத்துவத்தில் பல்வேறு மருந்துகளில் சேர்க்கப்படுகிறது. தேங்காய் எண்ணெய் எளிதில் ஜீரணமாகும். தேங்காய் எண்ணெய் தடவி வந்தால் [...]

Continue reading...

27 January 2012

0 Comments

ஒரு ரன்னுக்கு 3 விக்கெட்டுகளை இழந்த பாகிஸ்தான்

இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் தனது முதல் இன்னிங்ஸில் 96.4 ஓவர்களில் 257 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. அந்த அணி முதல் நாளான புதன்கிழமை ஆட்டநேர முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 256 ரன்கள் எடுத்திருந்தது. 2-வது நாளான வியாழக்கிழமை மேலும் ஒரு ரன் மட்டுமே சேர்த்த நிலையில், 257 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் மிஸ்பா உல் ஹக் 84 ரன்கள் சேர்த்தார். இரண்டாவது நாளில் பேட் செய்த அந்த அணியின் சயீத் [...]

Continue reading...

27 January 2012

0 Comments

பின்லேடன் பதுங்கியிருந்த கட்டிடம் அருகே மர்ம நபர்கள் ராக்கெட் வீசி தாக்குதல்

பாகிஸ்தானில் அபோதாபாத்தில் அல்கொய்தா பயங்கரவாத தலைவன் ஒசாமா பின்லேடன் பதுங்கியிருந்த கட்டிடம் அருகே இன்று காலை ராக்கெட் வெடிகுண்டு தாக்குதல் நடந்தது. பாகிஸ்தானின் அபோதாபாத் நகரில் பாகிஸ்தான் இராணுவ அகடமி அருகில் உள்ள கட்டிடம் ஒன்றில் ஒசாமா பதுங்கி இருந்தார். இதனை கண்டுபிடித்த அமெரிக்க கடற்படையினர் கடந்தாண்டு மே மாதம் சுட்டுக் கொன்றனர். அதன்பிறகு அந்த கட்டிடத்துக்கு சீல் வைக்கப்பட்டதுடன் பலத்த பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. இந்நிலையில் ஒசாமா தங்கியிருந்த கட்டிடத்தின் அருகில் மர்ம ஆசாமிகள் சிலர் ராக்கெட் [...]

Continue reading...

27 January 2012

0 Comments

முதலமைச்சரின் கடிதமும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அணுகுமுறையும். ஆரோக்கியமானதொரு விவாதத்திற்காக…

தமிழ் காங்கிரஷ் , தமிழரசுக் கட்சி, தமிழர் விடுதலைக்கூட்டணி என்ற வரலாற்றுத் தொடர்ச்சியின் இன்றைய வடிவமே தமிழ் தேசியக் கூட்டமைப்பாகும். பிரபல மேதாவி பொன் அருணாச்சலம் தொடங்கி அமிர்தலிங்கம் வரையிலான மிகப்பெரும் தலைமைகள் வழிநடாத்திய அரசியலையே இன்றைய தமிழ் கூட்டமைப்பும் அதன் தலைமையும் பிரதிபலிக்கின்றன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் கூட ஐம்பது வருட அரசியல் அனுபவம் மிக்க பழுத்த அரசியல்வாதி என்று போற்றப்படுகின்றார். தலைமை என்பது வல்லமை வாய்ந்ததாக இருப்பது மட்டும் அல்ல நல்லெண்ணம் [...]

Continue reading...

27 January 2012

0 Comments

கிழக்கு மாகாணத்தை அவமதிக்கும் வகையில் செய்திகளை வெளியிடும் தமிழ்வின் இணையத்தளத்திற்கு கிழக்கு பல்கலைக்கழக பழைய மாணவர் ஒன்றியம் எச்சரிக்கை

அண்மையில் கிழக்கு மாகாண முதலமைச்சரை சம்பந்தப்படுத்தி இழிவான செய்தி ஒன்றை தமிழ்வின் இணையத்தளம் வெளியிட்டிருந்தது. இதனைக் கண்டிக்கும் வகையில் கிழக்கு பல்கலைக் கழக பழைய மாணவர் ஒன்றியம் தமிழ் வின் இணையத்தளத்தின் உரிமையாளருக்கு ஓர் எச்சரிக்கை கடிதத்தினை எழுதியிருந்தது. அக் கடிதம் வருமாறு. அன்பின் தமிழ்வின் இணையத்தள நிர்வாகிக்கு. உங்கள் இணையத்தளத்தில் 26.01.2012 அன்று கூட்டமைப்பு தமிழ் சமூகத்தின் ஆணையை மீறி கிழக்கு முதல்வரை சந்தித்தால் அன்று கிழக்கின் துக்க தினம்!- கிழக்கு பல்கலை பழைய மாணவர்கள் [...]

Continue reading...

26 January 2012

0 Comments

உழவு இயந்திரம் குடைசாய்ந்ததில் 6 மாணவர்கள் காயம்

மட்டக்களப்பு, சத்துருக்கொண்டானில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச்சென்ற உழவு இயந்திரம் குடைசாய்ந்ததில் ஆறு மாணவர்கள் படுகாயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நாவலடி, நாமகள் வித்தியாலயத்துக்கு இன்று காலை சத்துருக்கொண்டானில் உள்ள சிறுவர் இல்லம் ஒன்றில் இருந்து மாணவர்களை ஏற்றுச்சென்றவேளை இவ்விபத்து நேர்ந்துள்ளது என மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர். உழவு இயந்திரத்தின் பெட்டி கழன்றதனால் இந்த விபத்து நேர்ந்துள்ளது எனவும் பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பில் மட்டக்களப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

Continue reading...

26 January 2012

0 Comments

தென் ஆப்ரிக்காவில் அரிய வகை உயிரினங்கள் கண்டுபிடிப்பு

தென் ஆப்ரிக்காவின் கரினாம் பகுதியில் அடர்ந்த காட்டுப்பகுதிகள் அதிகம் காணப்படுவதால் ஏராளமான பல அரிய உயிரினங்கள் வாழ்கின்றன. இது தொடர்பாக சர்வதேச உயிரியல் குழுவொன்று ஆய்வு நடத்தியதில் இதுவரை கண்டுபிடிக்கப்படாத 40 விதமான உயிரினங்களை கண்டுபிடித்து உள்ளனர். தவளை, மீன், வண்ணத்து பூச்சி போன்றவற்றில் பல புதிய வகை அரிய உயரினங்கள் அங்கு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. அதில் காலில் வெள்ளை கோடு போடப்பட்ட தவளை, பல வண்ணங்களை கொண்ட வெட்டுக்கிளி, கைகள் போன்ற அமைப்பு உள்ள [...]

Continue reading...