குடிவரவு-குடியகல்வு திணைக்கள அலுவலகம் ஒன்று திருகோணமலையில் திறக்கப்படவுள்ளது. குடிவரவு குடியகல்வு திணைக்கள கட்டுப்பாட்டாளர் தென்னக்கோன் இதனைத் தெரிவித்துள்ளதாக அரச தகவல் திணைக்களம் செய்தி வெளியிட்டுள்ளது.
‘கிழக்கின் உதயம்’ வேலைத்திட்டத்தின் கீழ் இவ்வலுவலகம் திறக்கப்படவுள்ளது. திருகோணமலைத் துறைமுகத்தின் குடிவரவு குடியகல்வு பணிகளை இதுவரை பொலிஸ் திணைக்களமே மேற்கொண்டு வந்தது.
எனினும் அப்பணிகளை தமது திணைக்களம் விரைவில் பொறுப்பேற்கவுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களக் கட்டுப்பாட்டாளர் மேலும் தெரிவித்துள்ளார்









