ஐக்கியம், சகிப்புத்தன்மை, சுபிட்சம் நிறைந்த புதியதோர் இலங்கைத் தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கு இலங்கை முஸ்லிம்களின் தொடர்ச்சியான பங்களிப்பை நான் எதிர்பார்க்கின்றேன் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுத்திருக்கும் புனித நோன்புப் பெருநாள் செய்தியில் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது செய்தியில் மேலும் தெரிவித்துள்ளதாவது, உலகெங்கிலுமுள்ள முஸ்லிம்களினால் பேருவகையுடன் கொண்டாடப்படும் ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு இவ்வாழ்த்துச் செய்தியை அனுப்புவதில் பெருமகிழ்ச்சிய டைகிறேன். இஸ்லாமிய கலண்டரில் மேன்மைமிகு மாதமான ரமழான் மாதத்தின் பூர்த்தியின் பின்னர் ஈதுல் பித்ர் நோன்புப் [...]








