ரி.எம்.வி.பி கட்சி அறவானின் கொலைக்கு கண்டனத் தீர்மானம் நிறைவேற்றியது.


Warning: strpos() [function.strpos]: Offset not contained in string in /home/meen/public_html/wp-content/themes/options/library/functions/template-functions.php on line 334

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் முக்கிய உறுப்பினரும் ஆரையம்பதி பிரதேச அரசியல் கட்சி இணைப்பாளருமான அறவான் என்று அழைக்கப்படும் இராமலிங்கம் ஜெயக்குமார் கடந்த 04-06-2009 அன்று இனந்தெரியாத ஆயுதபாணிகளால் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார்.  இன்று இலங்கையிலிருந்து பயங்கரவாதம் முற்று முழுதாக அளிக்கப்பட்டு உண்மையான விடுதலையினையும் ஜனநாயகத்தினையும் அனைவரும் அனுபவிக்க தயாராகும் இந்த நேரத்தில் இவ்வாறான திட்டமிட்ட படுகொலைகளை ஜனநாயகத்தை நேசிக்கும் எந்வொரு மனிதனாலும் ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் இதனை வன்மையாகக் கண்டிப்பதாகவும் கூறி கண்டனப் பிரேரணையை கிழக்குமாகாண சபை [...]

ரி.எம்.வி.பி கட்சி அறவானின் கொலைக்கு கண்டனத் தீர்மானம் நிறைவேற்றியது.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் மத்திய செயற்குழு 09-05-2009 அன்று கட்சியின் தலைமைச் செயலகத்தில் கூடியது.


Warning: strpos() [function.strpos]: Offset not contained in string in /home/meen/public_html/wp-content/themes/options/library/functions/template-functions.php on line 334

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் கௌரவ. திரு.சி. சந்திரகாந்தன் தலைமையில் கட்சியின் தலைமைச் செயலகத்தில் 09.05.2009 அன்று கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர்கள், கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து கட்சியின் எதிர்கால அரசியல் செயற்பாடுகள் குறித்து ஆராய்ந்திருந்தனர். கட்சித் தலைவர் தலைமையில் ஆரம்பிக்கப்பட்ட கட்சியின் கூட்டமானது மக்களினதும் தாய் மண்ணினதும் நலனுக்காய் உயிர் தியாகங்கள் செய்த அனைத்து மாவீரர்கள், மக்கள் அனைவiரையும் நினைவு கூர்ந்து ஒரு நிமிட இறைவணக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டது. கட்சியின் தலைவர் அவர்களினால் [...]

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் மத்திய செயற்குழு 09-05-2009 அன்று கட்சியின் தலைமைச் செயலகத்தில் கூடியது.

பிறந்திருக்கும் சித்திரைப் புத்தாண்டுதின பூஜை வழிபாட்டில் ஈடுபடும் கிழக்கு முதல்வர்.


Warning: strpos() [function.strpos]: Offset not contained in string in /home/meen/public_html/wp-content/themes/options/library/functions/template-functions.php on line 334

மலர்ந்திருக்கின்ற சித்திரைப்புத்தாண்டு தினத்தினையொட்டி இடம்பெற்ற பூஜை வழிபாட்டில் கிழக்கு முதல்வர் சந்திரகாந்தன் கலந்து கொண்டு பூஜை வழிபாடுகளை மேற்கொண்டிருந்தார். மட்டக்களப்பு யானைப்பந்தி பிள்ளையார் ஆலயத்தினை வழிபட்டு விட்டு பின்னர் மட்டக்களப்பு ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தில் இடம் பெற்ற பூஜை வழிபாட்டில் கலந்து கொண்டார். இரவு 11.07மணிக்கு பிறந்த சித்திரை வருடப்பிறப்பினை ஆலயத்திற்கு சென்று பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டு முதல்வர் சிறப்பித்தார்.  

பிறந்திருக்கும் சித்திரைப் புத்தாண்டுதின பூஜை வழிபாட்டில் ஈடுபடும் கிழக்கு முதல்வர்.

புதிய செய்திகள்

கிழக்கு மாகாண முதலமைச்சரை புதுடில்லிக்கு வருமாறு இந்திய வெளியுறவுச் செயலர் அழைப்பு.

கிழக்கு மாகாண முதலமைச்சரை புதுடில்லிக்கு வருமாறு இந்திய வெளியுறவுச் செயலர் அழைப்பு.

கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களை பொதுத் தேர்தலுக்குப் பின்னர் பொருத்தமான தினத்தில் இந்தியத் தலைநகரான புதுடில்லிக்கு உத்தியோகபூர்வ ஒரு அரசு முறைப் பயணமாக வருகை தருமாறு இந்திய வெளியுறவுத்துறைச்செயலர் திருமதி நிருபமராவ் அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார். இன்று (08.03.2010.) முதலமைச்சர் அவர்களை சந்தித்து உரையாடிய போதே இவ் உத்தியோகபூர்வ அழைப்பினை விடுத்திருந்தாக  முடிகிறது.
இவ் அழைப்பின் மூலம் இந்தியா,  தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் அரசியல் [...]

சுகாதார அமைச்சு கிழக்குமாகாண முதலமைச்சருக்கு.

சுகாதார அமைச்சு கிழக்குமாகாண முதலமைச்சருக்கு.

கிழக்கு மாகாணத்தின் சுகாதாரமும்,சுதேச மருத்துவமும், சமூக நலனோம்புகை, நன்னடத்தை சிறுவர் பாதுகாப்புச் சேவைகள்,மகளிர் அலுவல்கள், இளைஞர் அலுவல்கள், விளையாட்டுத்துறை, தகவல் தொழில்நுட்பக்கல்வி, கூட்டுறவு அபிவிருத்தி, உணவு வழங்கலும் விநியோகமும் தொடர்பான அமைச்சினை கிழக்குமாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் இன்று காலை 08.45 மணியளவில் கிழக்குமாகாண ஆளுனர் ரியர் அத்மிரல் மொகான் விஜேவிக்கிரம முன்னிலையில் பொறுப்றே;றார். மேற்படி நிகழ்வானது ஆளுனர் செயலகம் திருமலையில் இடம் பெற்றது. சுகாதார அமைச்சை ஏலவே எம். எல். ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்கள் பொறுப்பேற்றிருந்தார் [...]

'தாயில் இருந்து குழந்தைக்கு எச்.ஐ.வி பரவுவதை 5 வருடங்களில் தடுக்க முடியும்'

‘தாயில் இருந்து குழந்தைக்கு எச்.ஐ.வி பரவுவதை 5 வருடங்களில் தடுக்க முடியும்’

தாயில் இருந்து குழந்தைக்கு எச்.ஐ.வி பரவுவதை 2015 ஆம் ஆண்டளவில் தடுக்கக் கூடிய நிலையில் தாம் இருப்பதாக, எயிட்ஸ், காசநோய் மற்றும் மலேரியாவுக்கு எதிரான உலக நிதியம் கூறியுள்ளது.
இந்த சுகாதார திட்டத்தின் முன்னேற்ற மற்றும் முதலீட்டு வீதம் தற்போது உள்ள நிலையிலேயே தொடருமானால், தாம் இந்த இலக்கை எட்ட முடியும் என்று அந்த நிதியத்தின் அறிக்கை ஒன்று கூறுகிறது.
மலேரியா பெரும் கொள்ளை நோயாக காணப்படுகின்ற பல நாடுகளில் இருந்து விரைவில் ஒழிக்கப்பட்டுவிடும் என்றும் அது கூறுகிறது.
கடந்த வருடத்தில் [...]

2009-ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள் அறிவிக்கப்பட்டுவிட்டன. ஜேம்ஸ் கேமரூனின் அவதார் படத்துக்கு மூன்று விருதுகள் மட்டுமே கிடைத்தன.

2009-ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள் அறிவிக்கப்பட்டுவிட்டன. ஜேம்ஸ் கேமரூனின் அவதார் படத்துக்கு மூன்று விருதுகள் மட்டுமே கிடைத்தன.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜேம்ஸ் கேமரூனின் அவதார் படத்துக்கு மூன்று விருதுகள் மட்டுமே கிடைத்தன. ஆனால் கேமரூனின் முன்னாள் மனைவி கேதரின் பிக்லோ இயக்கிய, தோல்விப் படம் என்று அறிவிக்கப்பட்ட தி ஹர்ட் லாக்கருக்கு சிறந்த படம், சிறந்த இயக்கம் உள்ளிட்ட 6 விருதுகள் கிடைத்துள்ளன.
சிறந்த படம், சிறந்த இயக்கம், சிறந்த எடிட்டிங், சிறந்த சவுண்ட் எடிட்டிங், சிறந்த சவுண்ட் மிக்ஸிங், சிறந்த ஒரிஜினல் ஸ்கிரீன்பிளே ஆகிய 6 பிரிவுகளில் இந்த விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
அவதார் திரைப்படம் சிறந்த படம், [...]

பிரான்ஸ் கடற்படை அதிரடி நடவடிக்கை : 35 கடற்கொள்ளையர் கைது

பிரான்ஸ் கடற்படை அதிரடி நடவடிக்கை : 35 கடற்கொள்ளையர் கைது

பிரான்ஸ் கப்பற்படை, கடற்கொள்ளையர்களைப் பிடிக்க அதிரடி வேட்டை நடத்தியதில், கடத்தல் முயற்சியில் ஈடுபட்ட 35 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சோமாலியாவைச் சேர்ந்த கடற்கொள்ளையர்கள் இந்திய பெருங்கடலில் பயணம் செய்யும் கப்பல்களைக் கடத்தி வருகின்றனர். அவற்றைச் சிறை பிடித்துச் செல்லும் அவர்கள் பெரிய அளவில் பிணைத்தொகை பெற்றுக் கொண்டு அக்கப்பலை விடுவிக்கின்றனர்.
இது பல ஆண்டுகளாகத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. எனவே, ஐரோப்பிய யூனியன் கடந்த 2008ஆம் ஆண்டு அட்லாண்டா மிஷன் என்ற அமைப்பை உருவாக்கியது.
அவர்கள் கடல் பகுதியில் ரோந்து சுற்றி [...]

இந்திய வெளிஉறவுச்செயலரை கிழக்கு மாகாண முதலமைச்சர் சந்திப்பு.

இந்திய வெளிஉறவுச்செயலரை கிழக்கு மாகாண முதலமைச்சர் சந்திப்பு.

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றினை மேற்கொண்டு வருகைதந்திருக்கும் இந்திய வெளிஉறவுச் செயலர் திருமதி நிருபமராவ் அவர்களுக்கும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களுக்குமிடையிலான உயர்மட்டச் சந்திப்பொன்று இன்று(08.03.2010.) கொழும்பு தாச் சமுத்திரா கோட்டலில் இடம்பெற்றது.
இச்சந்திப்பின்போது நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் நிலைப்பாடு தொடர்பாகவும், அதிகாரமிக்க மாகாண சபையினை அமைப்பதற்காக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியானது முன்னெடுக்கின்ற அரசியல் நகர்வுகள் குறித்தும், அதற்காக [...]

10 சிவிலியன்கள் உட்பட 31 பேரிடமிருந்து பொன்சேகாவுக்கு எதிராக சாட்சியங்கள் பதிவு

10 சிவிலியன்கள் உட்பட 31 பேரிடமிருந்து பொன்சேகாவுக்கு எதிராக சாட்சியங்கள் பதிவு

தொழில்நுட்ப சாட்சியங்களும் இணைப்பு; முழு அறிக்கை இந்த வாரம் இராணுவ தளபதியிடம் கையளிப்பு
இராணுவ நீதிமன்றத்தில் விசாரணைகளை ஆரம்பிப்பதற்கு ஏதுவாக சரத் பொன்சேகாவுக்கு எதிராகப் பதியப்பட்ட சாட்சியங்கள் அடங்கிய முழுமையான அறிக்கை இராணுவத் தளபதியிடம் இந்தவாரம் கையளிக்கப்படவிருப்பதாக இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்தார்.
10 சிவிலியன்கள் உட்பட 31 பேரிடமிரு ந்தும் சரத் பொன்சேகாவுக்கு எதிராக சாட்சியங்கள் பதிவு செய்யப்ப ட்டுள்ளன. அத்துடன் (டெக்னிகல் எவிடன்ஸ்) தொழில் நுட்ப சாட்சியங்களும் ஆவணப்படுத்தப்பட் டுள்ளன. மேற்படி சாட்சியங்களின் [...]

இராக் நாடாளுமன்றத் தேர்தல் முடிவடைந்தது.

இராக் நாடாளுமன்றத் தேர்தல் முடிவடைந்தது.

இராக் நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குபதிவு ஞாயிற்றுக்கிழமையன்று முடிவடைந்தது. அமெரிக்கா தலைமையிலான பன்னாட்டு படைகள் இராக்கிற்குள் 7 வருடங்களுக்கு முன்னர் நுழைந்த பின்னர் நடத்தப்படும் இரண்டாவது வாக்களிப்பு இதுவாகும்.
கணிசமான இராக்கியர்கள் தேர்தலில் வாக்களித்ததாக இராக்கின் பல நகரங்களில் இருக்கும் பிபிசி செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மக்கள் வாக்களிக்க செல்வதை ஊக்குவிக்கும் முகமாக கார் போக்குவரத்து மீதான தற்காலிக தடையை அதிகாரிகள் அகற்றியிருந்தனர்.
இதற்கிடையே, கிளர்ச்சியாளர்களின் பல தொடர் தாக்குதல்களில் மொத்தம் 35 பேர் கொல்லப்பட்டிருந்தாலும், தேர்தல் நடைபெற்று முடிந்தது.
தலைநகர் பாக்தாத்தில் குண்டுத்தாக்குதல் ஒன்றில் [...]

ஐஸ்லாண்டில் மக்கள் வாக்கெடுப்பு.

ஐஸ்லாண்டில் மக்கள் வாக்கெடுப்பு.

ஐஸ்லாண்டை சேர்ந்த ஐஸ்சேவ் வங்கி திவாலானதை தொடர்ந்து பிரிட்டன் மற்றும் நெதர்லாந்துக்கு ஐந்து பில்லியன் டாலருக்கும் அதிகமான தொகையை செலுத்துவதா வேண்டாமா என்பது தொடர்பான மக்கள் வாக்கெடுப்பு ஐஸ்லாண்டில் நடைபெற்று வருகிறது.
இந்த வங்கியில் ஏராளமான பிரிட்டிஷ் மற்றும் நெதர்லாந்து மக்கள் முதலீடு செய்திருந்தனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக அந்த அரசுகள் உதவி திட்டங்களை செயற்படுத்தியிருந்தன. அந்த திட்டங்களை நடத்தியதற்கான பணத்தை தர வேண்டும் என்று இந்த அரசுகள் கோருகின்றன.
ஆனால் ஏற்கனவே பணத்தை தர ஐஸ்லாண்ட் அரசு ஒப்புக் கொண்டுள்ளதால், [...]

ஐ.நா நிபுணத்துவக் குழு தேவையற்றது; பான்கீ மூனிடம் ஜனாதிபதி தெரிவிப்பு

ஐ.நா நிபுணத்துவக் குழு தேவையற்றது; பான்கீ மூனிடம் ஜனாதிபதி தெரிவிப்பு

இலங்கையின் யுத்தக் குற்றங்கள் பற்றி ஆராய்வதற்காக நிபுணர்கள் குழுவொன்றை ஐ. நா. செயலாளர் நாயகம் நியமிக்கத் தீர்மானித்துள்ளதை இலங்கையின் உள்விவகாரங்களில் தலையிடுவது தேவையற்றதும், விரும்பத்தகாததுமான செயலென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உறுதியாகத் தெரிவித்துள்ளார்.
ஐ. நா. செயலாளர் நாயகம் பான்கீமூன் நேற்று முன்தினம் (வெள்ளி) தொலைபேசி மூலம் ஜனாதிபதியுடன் தொடர்புகொண்டு பேசினார். அதன்போதே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது ஆட் சேபனையைத் தெரிவித் தாரென ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
இலங்கை விவகாரம் தொடர்பாக ஆராய நிபுணர்கள் [...]