ரி.எம்.வி.பி கட்சி அறவானின் கொலைக்கு கண்டனத் தீர்மானம் நிறைவேற்றியது.


Warning: strpos() [function.strpos]: Offset not contained in string in /home/meen/public_html/wp-content/themes/options/library/functions/template-functions.php on line 334

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் முக்கிய உறுப்பினரும் ஆரையம்பதி பிரதேச அரசியல் கட்சி இணைப்பாளருமான அறவான் என்று அழைக்கப்படும் இராமலிங்கம் ஜெயக்குமார் கடந்த 04-06-2009 அன்று இனந்தெரியாத ஆயுதபாணிகளால் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார்.  இன்று இலங்கையிலிருந்து பயங்கரவாதம் முற்று முழுதாக அளிக்கப்பட்டு உண்மையான விடுதலையினையும் ஜனநாயகத்தினையும் அனைவரும் அனுபவிக்க தயாராகும் இந்த நேரத்தில் இவ்வாறான திட்டமிட்ட படுகொலைகளை ஜனநாயகத்தை நேசிக்கும் எந்வொரு மனிதனாலும் ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் இதனை வன்மையாகக் கண்டிப்பதாகவும் கூறி கண்டனப் பிரேரணையை கிழக்குமாகாண சபை [...]

ரி.எம்.வி.பி கட்சி அறவானின் கொலைக்கு கண்டனத் தீர்மானம் நிறைவேற்றியது.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் மத்திய செயற்குழு 09-05-2009 அன்று கட்சியின் தலைமைச் செயலகத்தில் கூடியது.


Warning: strpos() [function.strpos]: Offset not contained in string in /home/meen/public_html/wp-content/themes/options/library/functions/template-functions.php on line 334

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் கௌரவ. திரு.சி. சந்திரகாந்தன் தலைமையில் கட்சியின் தலைமைச் செயலகத்தில் 09.05.2009 அன்று கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர்கள், கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து கட்சியின் எதிர்கால அரசியல் செயற்பாடுகள் குறித்து ஆராய்ந்திருந்தனர். கட்சித் தலைவர் தலைமையில் ஆரம்பிக்கப்பட்ட கட்சியின் கூட்டமானது மக்களினதும் தாய் மண்ணினதும் நலனுக்காய் உயிர் தியாகங்கள் செய்த அனைத்து மாவீரர்கள், மக்கள் அனைவiரையும் நினைவு கூர்ந்து ஒரு நிமிட இறைவணக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டது. கட்சியின் தலைவர் அவர்களினால் [...]

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் மத்திய செயற்குழு 09-05-2009 அன்று கட்சியின் தலைமைச் செயலகத்தில் கூடியது.

பிறந்திருக்கும் சித்திரைப் புத்தாண்டுதின பூஜை வழிபாட்டில் ஈடுபடும் கிழக்கு முதல்வர்.


Warning: strpos() [function.strpos]: Offset not contained in string in /home/meen/public_html/wp-content/themes/options/library/functions/template-functions.php on line 334

மலர்ந்திருக்கின்ற சித்திரைப்புத்தாண்டு தினத்தினையொட்டி இடம்பெற்ற பூஜை வழிபாட்டில் கிழக்கு முதல்வர் சந்திரகாந்தன் கலந்து கொண்டு பூஜை வழிபாடுகளை மேற்கொண்டிருந்தார். மட்டக்களப்பு யானைப்பந்தி பிள்ளையார் ஆலயத்தினை வழிபட்டு விட்டு பின்னர் மட்டக்களப்பு ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தில் இடம் பெற்ற பூஜை வழிபாட்டில் கலந்து கொண்டார். இரவு 11.07மணிக்கு பிறந்த சித்திரை வருடப்பிறப்பினை ஆலயத்திற்கு சென்று பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டு முதல்வர் சிறப்பித்தார்.  

பிறந்திருக்கும் சித்திரைப் புத்தாண்டுதின பூஜை வழிபாட்டில் ஈடுபடும் கிழக்கு முதல்வர்.

புதிய செய்திகள்

மீண்டும் தலைதூக்கியுள்ள டெங்கு அபாயம்!

மீண்டும் தலைதூக்கியுள்ள டெங்கு அபாயம்!

நாடெங்கும் டெங்குக் காய்ச்சல் மீண்டும் தீவிரமாகப் பரவி வருகிறது. கடந்த வருடத்தில் டெங்கு நோய் மோசமாகப் பரவியிருந்தது. டெங்கு நோய்க்குள்ளாகி கடந்த வருடம் மரணமடைந்தோரின் எண்ணிக்கை முந்நூறுக் கும் மேலானதாகும். அதேசமயம் கடந்த வருடத்தில் இந்நோயினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை முப்பத்து நாலாயிரத்தையும் தாண்டியிருந்தது.
கடந்த வருட இறுதியில் இந்நோயின் தாக்கம் சற்றுத் தணிந்தி ருந்த போதிலும், இவ்வருடம் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. கடந்த ஜனவரி மாதத்தில் மாத்திரம் டெங்கு நோயினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை இருபத்தைந்து ஆகும். நோயினால் பீடிக்கப்பட்டோர் மூவாயிரத்தையும் [...]

வடக்கு அரச நிறுவனங்களில் மும்மொழி பெயர்ப் பலகை

ரூ. 75 இலட்சம் அமைச்சு ஒதுக்கீடு
வடக்கிலுள்ள சகல அரசாங்க நிறுவனங்களிலும் மும்மொழிகளிலும் பெயர்ப் பலகைகளை தொங்க விடுவதற்காக நிதி ஒதுக்கியுள்ளதாக அரசியல் விவகார தேசிய நல்லிணக்க அமைச்சர் நேற்று தெரிவித்தது.
இதன்படி வவுனியா, மன்னார், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் புதிதாக அமைக்கப்பட்டுவரும் மாவட்ட செயலாளர்கள், பிரதேச செயலகங்கள் மற்றும் அரச நிறுவனங்களில் மும்மொழிகளிலும் பெயர்ப்பலகைகள் பொருத்தப்பட்டு வருவதாக அமைச்சு செயலாளர் திருமதி எம். எஸ். விக்ரமசிங்க தெரிவித்தார்.
மும்மொழிகளிலும் பெயர்ப்பலகைகளை பொருத்த 75 இலட்சம் ரூபா வழங்கப்பட்டு [...]

எனக்கு வழங்கிய டொக்டர் பட்டம் இலங்கை மக்கள் அனைவருக்கும் கிடைத்த வெற்றி:மொஸ்கோவில் ஜனாதிபதி

எனக்கு வழங்கிய டொக்டர் பட்டம் இலங்கை மக்கள் அனைவருக்கும் கிடைத்த வெற்றி:மொஸ்கோவில் ஜனாதிபதி

ரஷ்யாவின் நட்புறவு பல்கலைக்கழகம் எனக்கு வழங்கிய டொக்டர் பட்டம் எனக்கு கிடைத்த தனிப்பட்ட வெற்றி அல்ல. அது இலங்கை மக்கள் அனைவருக்கும் கிடைத்த பொதுவான வெற்றியாகும். என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ரஷ்யாவில் தெரிவித்தார்.
ரஷ்யாவின் நட்புறவு (லுமும்பா) பல்கலைக்கழகம் ஜனாதிபதிக்கு கௌரவ டொக்டர் பட்டம் வழங்கி கௌரவித்ததையடுத்து உரையாற்றியபோதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் கூறியதாவது:-
“இந்தப் பட்டம் வழங்கப்படுவதற்கு உலக சமாதானத்துக்கு நாம் ஆற்றிய பங்களிப்பே காரணம் என்று பட்டம் வழங்கல் தொடர்பான குறிப்பில் கூறப்பட்டுள்ளது.முழு [...]

உலக வர்த்தக மைய தாக்குதல் ரகசிய திட்டம் : புதிய தகவலால் பரபரப்பு

உலக வர்த்தக மைய தாக்குதல் ரகசிய திட்டம் : புதிய தகவலால் பரபரப்பு

அமெரிக்காவின் உலக வர்த்தக மையத்தின் மீது நடந்த தாக்குதலுக்கு முன்னதாகவே அப்போதைய ஈராக் ஜனாதிபதி சதாம் உசேனை பதவியில் இருந்து அகற்றுவதற்குஇ பிரிட்டன் ரகசிய திட்டம் தீட்டியது தெரியவந்துள்ளது.
அமெரிக்காவின் உலக வர்த்தக மையத்தின் மீது கடந்த 2001 செப்டம்பரில் அல்-குவைதா பயங்கரவாதிகள் விமானங்களை மோதி தாக்குதல் நடத்தினர்.
இதில் அந்த கட்டடம் தரை மட்டமாகியது. இதைத் தொடர்ந்து ஈராக் மீது அமெரிக்கா மற்றும் அதன் நேச நாடுகள் தாக்குதல் நடத்தின. தலைமறைவான அப்போதைய ஈராக் ஜனாதிபதி சதாம் உசேனை [...]

இலங்கைக்கு நேற்று ஐந்து தங்கப் பதக்கங்கள்

இலங்கைக்கு நேற்று ஐந்து தங்கப் பதக்கங்கள்

பங்களாதேஷின் தலைநகரான டாக்காவில் நடைபெற்று வரும் 11 ஆவது தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் இலங்கை நேற்று 5 தங்கப் பதக்கங்களை சுவீகரித்தது.
ஆண்களுக்கான 4×100 மீட்டர் அஞ்சலோட்டம், பெண்களுக்கான4×100 மீட்டர் அஞ்சலோட்டம், பெண்களுக்கான 400 மீட்டர் ஓட்டம், ஆண்களுக்கான கராட்டே. பெண்களுக்கான உயரம் பாய்தல் ஆகிய போட்டிகளிலேயே இலங்கை நேற்று தங்கப் பதக்கங்களை சுவீகரித்தது.
போட்டியின் 9 வது நாளான நேற்று பதக்கப் பட்டியலில் இந்தியா 67 தங்கம் 39 வெள்ளி 22 வெண்கலம் என மொத்தம் 128 பதக்கங்களுடன் [...]

ஜனாதிபதி மஹிந்தவுக்கு டொக்டர் பட்டம்; ரஷ்ய பல்கலைக்கழகம் கெளரவம்

ஜனாதிபதி மஹிந்தவுக்கு டொக்டர் பட்டம்; ரஷ்ய பல்கலைக்கழகம் கெளரவம்

உலக சமாதானத்துக்கு ஆற்றிய சீரிய பங்களிப்பு, பயங்கரவாதத்தை முறியடித்தமை மற்றும் இலங்கைக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் கல்வி, கலாசாரம் உட்பட பல்வேறு துறைகளில் பங்களிப்பு செய்தமைக்காகவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ரஷ்யாவின் மொஸ்கோ நட்புறவு (பட்ரிக் லுமும்பா) பல்கலைக்கழகம் விசேட கெளரவ டொக்டர் பட்டமொன்றை வழங்கி கெளரவித்துள்ளது.
ரஷ்யாவின் தலைநகரான மொஸ்கோவில் கிரெம்ளின் மண்டபத்தில் வைத்து நட்புறவு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் பிலிபோவ் இந்த கெளரவ டொக்டர் பட்டத்தை நேற்று முன்தினம் ஜனாதிபதிக்கு வழங் கினார். மொஸ்கோவின் ‘பட்ரிக் லுமும்பா’ பல்கலைக்கழகம் [...]

உள்நாட்டு பாதுகாப்பை பலப்படுத்த இந்திய மத்திய, மாநில அரசு கூட்டு நடவடிக்கை!

உள்நாட்டு பாதுகாப்பை பலப்படுத்த இந்திய மத்திய, மாநில அரசு கூட்டு நடவடிக்கை!

தீவிரவாத ஊடுருவல், தீவிரவாத தாக்குதல், பொருளாதாரத்தை சீர்குலைக்க கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விடுதல் என நாட்டின் பாதுகாப்புக்கு ஏராளமான அச்சுறுத்தல்கள் உள்ளன. மத்திய அரசும் மாநில அரசுகளும் இணைந்து கூட்டு நடவடிக்கைகள் எடுத்து இந்த அச்சுறுத்தல்களை முறியடிக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.
நாட்டில் பருப்பு வகைகள், சர்க்கரை, எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் விலை கடந்த சில மாதங்களாக அதிகளவில் உயர்ந்துள்ளது.
இதையடுத்து, நாட்டின் பொருளாதார நிலை, விலைவாசியை கட்டுப்படுத்துதல், உணவு தானிய உற்பத்தி, உள்நாட்டு [...]

இந்தியாவின் பிரசித்தி பெற்ற வீரர்கள் வரிசையில் சச்சின் முதலிடம்

இந்தியாவின் பிரசித்தி பெற்ற வீரர்கள் வரிசையில் சச்சின் முதலிடம்

ஆங்கில வார பத்திரிகை ஒன்று இந்திய விளையாட்டில் சிறப்பான வீரர்கள் 50 பேரின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
உலகின் தலை சிறந்த துடுப்பாட்ட வீரர், இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திரம் டெண்டுல்கர் முதலிடத்தில் உள்ளார்.
ஐ.பி.எல். போட்டிகளை வெற்றிகரமாக நடத்தி 20க்கு இருபது ஓவர் போட்டியை பிரபல்யம் அடைய வைத்த லலித்மோடி 2-வது இடத்தை பிடித்துள்ளார்.
பெங்களூர் ராயல் சலஞ்சர்ஸ் அணி உரிமையாளரும் போர்ஸ் இந்தியா உரிமையளாருமான விஜய் மல்லையா 3-வது இடத்தை பிடித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி கப்டன் டோனி 5-வது இடத்தில் [...]

இராணுவப் பேச்சாளராக பிரிகேடியர் பிரசாத்

இராணுவப் பேச்சாளராக பிரிகேடியர் பிரசாத்

பிரிகேடியர் பிரசாத் சமரசிங்க இராணுவப் பேச்சாளராக நியமிக்க ப்பட்டுள்ளார்.
நாளை திங்கட்கிழமை முதல் இராணுவப் பேச்சாளருக்கான கட மையை அவர் பொறுப்பேற்கவுள் ளார்.
இராணுவப் பேச்சாளராக இருந்த பிரிகேடியர் உதய நாணயக்கார இரா ணுவத்தின் பிரதம களப் பொறியி யலாளராக (Chief Field Engineer) நியமிக்கப்பட்டுள்ளதுடன் திங்கட் கிழமை முதல் அவரும் கடமையை பொறுப்பேற்கவுள்ளார்.
முன்னர் இராணுவப் பேச்சாளராக இருந்த பிரிகேடியர் பிரசாத் சமர சிங்க, லண்டனிலுள்ள இலங்கைத் தூதரகத்தின் இராணுவ ஆலோசக ராக நியமிக்கப்பட்டிருந்தார். லண் டனில் அவருக்கு வழங்கப்பட்ட [...]

ரஷ்யாவில் ஜனாதிபதிக்கு பெரு வரவேற்பு

ரஷ்யாவில் ஜனாதிபதிக்கு பெரு வரவேற்பு

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மூன்றுநாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு நேற்று (06) ரஷ்யா போய்ச் சேர்ந்தார். மொஸ்கோ வினுகோஆ சர்வதேச விமான நிலையம் சென்றடைந்த ஜனாதிபதிக்கு அங்கு பெரு வரவேற்பளி க்கப்பட்டது.
ஜனாதிபதியாக இரண்டாவது தடவையாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டதன் பின்னர் முதலாவது உத்தியோகபூர்வ விஜயமாக ரஷ்யா செல்லும் ஜனாதிபதி இரு நாடுகளுக்குமிடையிலான நட்புறவை வலுப்படுத்தும் வகையில் நாளை (08) ரஷ்ய ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
இதேநேரம், 300 மில்லியன் அமெரிக்க டொலருக்கான இருதரப்புக் கடன் உடன்படிக்கையொன்றிலும் ஜனாதிபதி கைச்சாத்திடுகின்றார். இரு நாடுகளுக்கு [...]